Monday, December 3, 2012

தலித் எதிர்ப்பு அரசியலா...?

பெற்றோர் விருப்பத்தை மீறி குறிப்பிட்ட சாதி-மத பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை கல்யாணம் செய்வது போல நடித்து கர்ப்பமாக்கி விட்டு நடுத்தெருவில் நிற்க வைத்து ஓடி விடுவது தமிழகத்தில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.இத்தீய நடவடிக்கைகளால் முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்படடுள்ளனர்.ஆனாலும் பொது இடங்களில் முஸ்லிம்கள் இந்த பாதிப்பு பற்றி பெரிய அளவில் விவாதிக்கவில்லை.ராமதாஸ் இது தொடர்பாக நேற்று அணைத்து சமுதாய மதத் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி இந்த விசயத்தை விவாதித்து சில தீர்மாணங்களை நிறைவேற்றியுள்ளார்.
கூட்டத்தில் பேசப்பட்ட நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இவை தான்

இந்த கூட்டத்தை தலித் எதிர்ப்பு கூட்டம் என்று சில அறிவுஜீவிகள் விமர்சிக்கின்றனர்.

அவர்களுக்கு நாம் முன்வைக்கும் சில விஷயங்கள்..

ராமதாஸ்.. தர்மபுரியில் இவரது சாதிப் பெண்னொருவள் ஓடிப்போய் விட்டாள் என்பதற்காக இந்த கூட்டத்தை கூட்டியிருக்கலாம்.அதை எவ்வாறு நீங்கள் தவறு என்று சொல்கிறீர்கள்?

முஸ்லிம் பெண்களை கடந்த காலங்களில் காதல் வயப்படுத்தி மற்ற மத சாதியினர் கவர்ந்து சென்றதை நீங்கள் இல்லை என்று மறுக்கத் தயாரா..?இல்லை.... இந்த செயல்களை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா..?

இந்த விசயத்தை தமுமுகவோ எஸ்டிபிஐ போன்ற இஸ்லாமிய இயக்கங்களோ தனியாக தம்மளவில் மாத்திரம் பேசி தீர்மானம் நிறைவேற்றி இருந்தால் இந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்குமா..? என்பது சந்தேகம் தான்.

இன்று வரை நமது உள்ளத்திலேயே புகைந்து கொண்டிருந்த இந்த விவகாரத்தை ஒரு பொது இடத்தில் வைத்து ராமதாஸ் விவாதிக்க தொடங்கி இருக்கிறார். இது தலித்துகளுக்கு எதிரானது என்ற விமர்சனம் தவறானது.நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான்.
கொள்ளுமேடு ரிஃபாயி

Saturday, November 24, 2012

16-22 நவம்பர் 2012 தேதியிட்ட மக்கள் உரிமை இதழில் வெளியான எனது கடிதம்


நவம்பர் 09-15 தேதியிட்ட மக்கள் உரிமை இதழல் வெளியான 'மதரஸா கல்வி:தேவை மாற்றம்' என்ற தலைப்பிலான ஆய்வு கட்டுரை படித்தேன்.
ஜாமிஆ மன்பவுல் அன்வார் எனும் இஸ்லாமிய மதரஸா அமையப் பெற்ற லால்பேட்டைக்கு மிக நெருக்கமான ஒரு ஊரில்,மார்க்க கல்வி பயின்றவர்கள் நிறைந்துள்ள ஓர் குடும்பத்தில் பிறந்த ஒருவனாக நான் இக்கட்டுரை குறித்து சில கருத்துக்களை பரிமாறிக் கொள்ள விழைகிறேன்.

தங்களது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவாறு இன்றைய சமூகத்தில் ஆன்மீக வறுமை ஏற்பட்டுள்ளது என்பதும்,அதற்கு இஸ்லாமிய கல்வி மட்டுமே சரியானதொரு தீர்வாக அமையும் என்பது மறுக்க முடியா பேருண்மையாகும்.
கல்வி கற்றல் என்பது பணம் சம்பாதிப்பதற்கான குறுக்கு வழி என்ற ஒரு விஷமச் சிந்தனை இன்றைய முதலாளித்துவ சூழலில் விரும்பி விதைக்கப்பட்டுவிட்டது.இதன் விளைவாக மதரஸாக்களுக்கு சென்று மார்க்கத்தை பயில்வது பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.

அதே நேரம் நமது மதரஸாக்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட வேண்டிய கட்டாயம் இன்றைக்கு உருவாகி இருக்கிறது.
உலகின் ஏற்படும் அணைத்து பிரச்சனைகளுக்கும் இஸ்லாத்தில் மாத்திரமே தீர்வு இருப்பதாக மேடைகள் தோறும் நாம் முழங்கி வருகிறோம்.இத்தகைய இஸலாமிய தீர்வுகளை உலகோர்கு அழகிய முறையில் சொல்லிக் கொண்டிருக்கும் டாக்டர் ஜாகிர் நாயக் போன்றோர் எந்த மதரஸாக்களுக்கும் சென்று ஏழு வருடங்கள் கல்வி பயின்று மவ்லவி ஆலிம் என்பதாக பட்டம் பெற்றவர்கள் அல்லர் என்பது ஆச்சரியமான ஒர் விஷயமாகும்.
ஆனால் நம்மூர் மதரஸா கல்வி முறைமை அத்தகைய இஸ்லாமிய தீர்வுகளை சரிவர எடுத்து சொல்லும் ஆலிம்களை உருவாக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
அரபுலகில் பிரசித்தி பெற்று விளங்கும் எகிப்து அல் அஸ்ஹர் இஸ்லாமிய பல்கலைக் கழகம்,மதீனா பல்கலைக்கழகம் போன்றவற்றில் மார்கக் கல்வி கற்றவர்கள் இஸ்லாமிய கல்வித் துறையில் தனி முத்திரை பதித்து வருகின்றனர்.அத்தகைய கலாசாலைகளில் பின்பற்றப்படும் போதனை முறைகளை நமது மதரஸாக்களில் கொண்டு வர முயல வேண்டும்.
நமது மதரஸாக்களில் அரபி மொழிக்கு அடுத்த படியாக உர்து மொழிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.இஸ்லாம் உலகம் முழுமைக்குமான வாழ்க்கை நெறியாகும்.ஆகையால் சர்வதேச மொழியான ஆங்கிலம் மதரஸா பாடத்திட்டத்தில் கட்டாயம் இணைக்கப் படவேண்டும்.

நபிகளார் காலத்தில் வாழ்ந்த இறைமறுப்பாளர்களைக் காட்டிலும் இன்றைய யூதர்களால் இஸ்லாமும் நமது உயிரினும் மேலான நபிகளாரும் மிகத் தரக் குறைவாக விமர்சிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.இத்தீய சக்திகள் ஊடகங்களை தங்களது கரங்களில் ஆயுதமாக ஏந்தியுள்ளனர்.
முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பதைப் போல நாமும் ஊடகங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.நமது மதரஸாக்களில் ஊடக பயன்பாடு குறித்த கல்வி போதிக்கப்பட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்டவர்கள் இத்தகைய மாற்றங்களை விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்.முன்வருவார்களா..?

Thursday, October 11, 2012

தமிழக முஸ்லிம் நாட்டுப் புறக் கலைஞர்கள்: பக்கிரிஷாக்கள்....!

மிக நீண்ட நாள்கள் கழித்து இந்த பக்கிரிசா பாடல்களை கேட்ட பொழுது சிறு பிராயத்தின் நினைவுகள் என் கண் முன்னே நிழலாடிச் சென்றன.நோன்பு காலங்களில் சஹர் நேரங்களில் சாப்பிடுவதற்கு இந்த மாதிரியான பாடல்களை பாடிக்கொண்டு உறங்குபவர்களை எழுப்பும் உன்னத பணியை செய்பவர்கள் தாம் இந்த பக்கிரிஷாக்கள்.வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை நேரங்களில் இவர்களின் பாடல்கள் ஒலிக்காத முஸ்லிம் கிராமங்கள் தமிழகத்தில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு,தமிழக முஸ்லிம்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போயிருந்தனர்.

மார்க்கத்துக்கு முரணான சில காரியங்களை தவிர்த்து விட்டு,இவர்களது கலைப் பணியை நாம் ஆய்வு செய்தோமேயானால் நிச்சயமாக இவர்கள் தமிழக முஸ்லிம்களின் கலாச்சார அடையாளங்கள் என்பதில் ஐயமில்லை.

 

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பக்கிரிஷாக்களின் பங்கு மகத்தானதாகும்.தங்களது பாடல்களின் வாயிலாக தேசத்தின் விடுதலை வேட்கையினை பட்டி தொட்டியெங்கும் உருவாக்கியுள்ளனர்.வீரியமான தமிழ் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர்களான இவர்களுக்கு தமிழக முஸ்லிம்களிடையே "சவால் பக்கீர்"என்றொரு பெயரும் வழங்கப்படுகிறது.

 இவர்களை நமது சமூகம் வெறுமனே யாசகர்களாக பார்த்தது ஒரு வரலாற்றுப் பிழையாகும்.

 கொள்ளுமேடு ரிஃபாயி

Saturday, September 15, 2012

நியாயவான்களே...!

இறைத்தூதர் முஹம்மது நபி (அவர்களின் மீது இறையருள் பொழிவதாக) அவர்களை இழிவு படுத்தும் வகையில் அமெரிக்க வாழ் யூதன் ஒருவன் Innocent Muslims என்ற பெயரில் எடுத்துள்ள படத்தின் டிரைலர் காட்சிகள் youtube சமூக தளத்தில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து உலகெங்கிலுமுள்ள இஸ்லாமிய சமூகம் உணர்ச்சிப் பிழம்பாய் வீதியில் இறங்கி, இந்த திரைப்படத்தை எடுத்த அந்த நபரை கண்டித்தும்,இத்தகைய துவேஷங்களுக்கு துணை போகும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி'யை கண்டித்தும் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய நம்பிக்கைகளையும்,இறைத் தூதர் முஹம்மது நபி (அவர்களின் மீது இறையருள் பொழிவதாக) அவர்களையும் இழிவு படுத்தும் போக்கு இன்று நேற்றல்ல.. காலங்காலமாகவே நடைபெற்று வருகிறது.உலக மக்களில் பெரும்பாலானோர் ஏதாவது ஒரு மதத்தை தமது வாழ்வியல் நெறியாக பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஒரு மத நம்பிக்கையினை மற்றொரு மதத்தவர் அவமதிப்பது பதிலுக்கு அவர்கள் இவர்களை இழிவு படுத்துவது போன்ற நிகழ்வுகள் உலகின் ஏதாவது ஒரு மூலையில் நடைபெற்றுக் கொண்டேதானிருக்கின்றன.ஆயினும் இத்தகைய அக்கப்போர்களுக்கு இஸ்லாத்தில் கிஞ்சிற்றும் இடமில்லை.

இது பற்றி குர்ஆன் தெளிவாகவே கருத்துரைக்கிறது...
(முஸ்லிம்களே) அவர்கள் ஏக இறைவனை விடுத்து யாரிடம் பிரார்த்தனை புரிகிறார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள். (குர்ஆன் 6:108) 

இத்தகைய அழகிய வழிகாட்டுதல்களை பின்பற்றுவதால் தான் இஸ்லாமியர்கள் மற்ற மத நம்பிக்கைகளையோ,அவர்களின் தெய்வங்களையோ விமர்சிப்பது கிடையாது.கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இத்தகைய அவதூறுகளுக்கு அரசாங்கங்கள் அங்கீகாரம் அளிக்குமானால் அதனை முஸ்லிம்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டிருக்கமாட்டார்கள்.

இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயம் வீதியில் இறங்கி போராடுவது இத்தகைய கட்டுப்பாடற்ற கருத்து சுதந்திரத்தை வழங்கி வரும் அமெரிக்க போன்ற அரசுகளுக்கு பாடம் புகட்டுவதற்காக தானே ஒழிய நபிகளாரை இழிவு படுத்திய யூதனின் மதத்தை கண்டிப்பதற்க்காகவோ அல்லது இழிவு படுத்துவதற்காகவோ அல்ல என்பதை நடுநிலையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

துவேஷத்துடன் முன்வைக்கப்படும் இத்தகைய விஷம கருத்துக்கள்,அறியாத மக்களுக்கு இஸ்லாத்தை பற்றியும்,நபிகளாரை பற்றியும் அறியத் தூண்டும் ஓர் உந்து சக்தியாக வடிவம் பெற்று வருகிறது என்பது சமீப காலங்களில் உலகம் கண்டு வரும் உண்மையாகும்.

Tuesday, September 11, 2012

உணவுகளை வீணடிக்காதீர்கள்....! (கவிதை)


கொடிய அணுஉலை வேண்டாம்...! (கவிதை)



சினிமாக் காரர்களே.... உங்களைத் தான்.....



சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.ஆனாலும் இந்த விவகாரம் கூடங்குளத்தை சுற்றி இருக்கும் ஐந்து கிராமங்களோடு மட்டும் சுருங்கிக் கிடக்கிறது.இந்த முடக்கத்திற்கு  பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.அவற்றில் முக்கியமான ஒரு காரணம் சினிமா.

 தமிழகத்தை பொறுத்த வரையில் சினிமாத்துறை மக்களோடு பின்னிப் பிணைந்த ஒன்றாக இருக்கிறது.சாதீயப் பெருமைகளையும் வர்ண பேதங்களையும் பற்றி பேசிய நமது சினிமாக் காரர்கள்,கூடங்குளம் அணுஉலை போன்ற மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை தங்களின் சினிமாக்களில் பேசத் தவறிவிட்டனர்.சினிமா நடிகர்களை நிஜ நாயகர்களாக கருதி அவர்களை கோட்டைக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இத்தகைய பிரச்சனைகளை சினிமா மொழியில் விளக்கினால் மட்டுமே நன்கு புரியும்.

 Dam 999 இந்த பெயரை தமிழகத்தை சேர்ந்தவர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.தென் தமிழகத்தின் விவசாய ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணையை உடைத்து தென் தமிழகத்தை  வறண்ட பாலைவனமாக மாற்ற மலையாள பாசிஸ்டுகள் மேற்கொண்ட சதிராட்டத்தின் உச்ச கட்டம் தான் இந்த Dam 999 என்ற திரைப்படம்.

 தமிழின எதிர்ப்பு என்ற ஒற்றை விஷ(ய)த்தை மட்டுமே மூலதனமாக்கி இந்த படம் எடுக்கப்பட்டது.இந்தப் படம் வெளியானதை தொடர்ந்து மலையாள ஊடகங்கள் இதற்க்கு விளம்பரம் தேடித்தருவதில் பெரும் பங்கு வகித்தன.அவர்கள் திட்டமிட்டபடி கேரளா முழுவதும் தமிழர்களுக்கெதிரான வெறுப்புணர்வினை இந்தப்படம் முறையாகவே கட்டமைத்தது.கேரளா எல்லையையும் தாண்டி,தேசிய (?) அளவிலும் இப்படம் பெருமளவில் விவாதிக்கப்பட்டது.

கோலிவுட் காரர்கள் கொஞ்ச நாளைக்கு "சதை வியாபாரம்"செய்யும் வேலையை நிறுத்தி விட்டு கூடங்குளம் அணுஉலையின் ஆபத்துக்களை விவரிக்கும் படங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் தயாரிக்கும் உருப்படியான வேலைகளை செய்யத் தொடங்குங்கள்.கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் என்பது அந்த ஊரை சுற்றியுள்ள சில கிராமங்களோடு முடிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல.. அது முழு தமிழகத்தை மட்டுமல்ல,முழு இந்தியாவையே உசுப்ப வேண்டிய ஒரு மாபெரும் உணர்ச்சிப் போராட்டமாகும்.


Sunday, September 2, 2012

நபிகளாரின் வரலாற்றை பேசும் உலக சாதனை புத்தகம்...

படிப்பறிவும் பகுத்தறிவும் இல்லாத காட்டுமிராண்டிகள் சமூகத்தில் பிறந்து,இறை தூது செய்தியின் வழியாக இவ்வுலகிற்கு நீதியையும் நெறியையும் போதித்த இறைத்தூதர் நபிகளார் (அல்லாஹ்வின் அருள் அவர்கள் மீது பொழியட்டுமாக) ஒரு வரலாற்று அதிசயமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இவர்களைப் போலவே இவர்களது வாழ்க்கை நெறியினை பேசும் ஒரு புத்தகமும் உலக அதிசயமாக பேசப்படுகிறது.

சவூதியை சேர்ந்த இஸ்லாமிய சட்ட வல்லுநர் டாக்டர் அப்துல்லாஹ் அப்துல் அஜீஸ் அல் முஸ்லிஹ் அவர்களால் இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை கொண்டிருப்பவர்களுக்காக தெளிவுகளை ஏற்படுத்தும் வகையில்,நபிகளாரின் வரலாற்றை தாங்கி   அரபி மொழியில் "இறைத்தூதர் முஹம்மது"என்று பெயரிடப்பட்டு ,புத்தகத்துக்கான வழக்கமான அம்சங்களுடன் (கையில் வைத்து படிக்கிறா மாதிரி ) வெளியிடப்பட்ட இந்த நூல்,துபையை சேர்ந்த மஷாஹாத் எனும் நிறுவனத்தின் முயற்சியால் 2012 ஆம் ஆண்டுக்கான கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.


கின்னஸ் உலக சாதனைக்காக சுமார் 1500 கிலோ எடையில் ஐந்து அடி நீளமும்,நான்கு அடி அகலமும் கொண்டு,420 பக்கங்களில் தோலில் அச்சிடப்பட்ட இந்த ராட்சத புத்தகம் "உலகிலேயே அதிக மிக நீளமான புத்தகம்"என்ற பெருமையை பெற்றிருக்கிறது.இந்த நூலின் மதிப்பு அமீரக திர்ஹம் 110 மில்லியன் ஆகும். 


அமீரகத்தின் துபையை தொடர்ந்து அல் அய்ன் போன்ற நகரங்களில்,மக்கள் ஒன்று கூடும் "ஷாப்பிங் மால்"களில் தற்பொழுது பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள இந்த "மெகா"புத்தகம்,தொடர்ந்து குவைத்,சவூதி அரேபியா மற்றும் முஸ்லிம் நாடுகளின் தலை நகரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





Monday, August 27, 2012

வரம்பு மீறல்கள்.... ஒரு பார்வை...!


சமூகத்தில் சீரான வாழ்க்கை முறையை உறுதி செய்வதற்காகத் தான் விதிகளும் வரம்புகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன.கட்டுப்பாடுகளற்ற ஓர் சமூக அமைப்பில் அமைதியான சூழ்நிலையினை எதிர்பார்க்க முடியாது.நாகரீகம் வளர்ந்துள்ளதாக நம்பப்படும் நாடுகளில் "வரம்புகளே இல்லை... எமக்கு வானமே எல்லை...." என்று குடி,கூத்து,கும்மாளம் என்பதாக திரிபவர்களின் வாழ்க்கை பின்னணியை சற்று ஆராய்ந்து பார்த்தால்.. நமக்கு ஒரு உண்மை புலப்படும்.இத்தகையோரின் பிறப்பே வரம்புகளற்ற உறவுகளில் தான் அமைந்திருக்கும்.

வரம்பு மீறல்களின் வரலாறு ஆதி மனிதர் ஆதம்(அலை)
அவர்களிலிருந்து தொடங்குகிறது.இது பற்றி திருக்குர்ஆனில்....
மேலும் நாம், "ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்" என்று சொன்னோம்.இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்.....(அத்தியாயம்:2,வசனம்:35,36)

இதனால் தான் என்னவோ... வரம்பு மீறலென்பது மனித வரலாற்றில் முற்றுப்பெறாத அத்தியாயமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சிறுநீர் கழிக்காதே என்பதாக எழுதப்பட்டிருக்கும் சுவர்களில் தான் நம்மவர்கள் "மூத்திரத்தால் சித்திரம் வரைவர்..!" எச்சில் துப்பாதீர் என்று எழுதப்பட்டிருக்கும் இடங்களுக்கு தான் நம்மவர்கள் "வெற்றிலை பாக்கு,பான்பராக் எச்சில்களால் வர்ணங்கள் பூசுவர்...!"இத்தகைய வரம்பு மீறல்கள் நமது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நிறைந்து காணப்படுகின்றன.

வளர்ச்சியடைந்ததாக நம்பப்படும் நாடுகளில் பொது இடங்களில் எச்சில் துப்புவது,சிறுநீர் கழிப்பது போன்ற செயல்கள் இல்லாவிட்டாலும்,போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது,அடுத்தவர்கள் உரிமைகளில் சர்வசாதாரணமாக தலையிடுவது,பொது இடங்களில் அணிந்தும் அம்மணமாக திரிவது போன்ற அவர்களின் வளர்ச்சிக்கு(?)தகுந்த மாதிரியான வரம்பு மீறல்கள் நடைபெற்று வருகின்றன.

மது பானங்களை விற்பனை செய்து கொண்டே.. குடி குடியை கெடுக்கும் என்பதாக பிரச்சாரம் ஒருபுறம்...! சினிமா,கலை என்ற பெயரில் விழிகளில் திணிக்கப்படும் விபச்சாரம் மறுபுறம்...! இந்த ரீதியில் அரசாங்கங்களே விதிகளை மீறும் போது,"குடி'களின் வரம்பு மீறல்களை தடுக்க முடியாது.

மீறப்படும் வரம்புகளுக்கு இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டுமென்ற இறையச்ச உணர்வு ஒன்று மட்டுமே சமூகத்தை வரம்புகளுக்குட்பட்டு வழிநடத்தும்.

- கொள்ளுமேடு ரிஃபாயி..

மறைந்த தலைவர் எஸ்.எம்.ஜின்னா அவர்கள் பற்றிய "மக்கள் உரிமை" இதழில் வெளியான எனது கட்டுரை


Saturday, August 18, 2012

வெளிநாடு வாழ் இந்தியர்கள் கொண்டு வரும் தங்க நகைகளுக்கு சுமை தரும் சுங்க வரி.மாற்றம் செய்யுமா இந்திய அரசு..?


 (பேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்ட,அதிக நபர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்ட எனது பதிவு...) 

வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கோடை விடுமுறையை குடும்பத்தோடு உல்லாசமாக கழிக்க தாயகம் நோக்கி செல்லும் காலம் இது.... அவ்வாறு செல்பவர்கள் தங்களது அன்புக்குரியவர்களுக்கு ஆசையாசையாய் வாங்கி செல்லும் பொருள் தங்க நகை.விமானத்தில் சிலமணி நேரங்கள் பயணித்து தாயகத்தில் தரை இறங்கிய உடன் விமான நிலையத்தில் இமிக்கிரேசன் சோதனைகளை முடித்து,தங்களது உடமைகளை கையில் வைத்துக் கொண்டு "சுங்கத் துறை" சோதனைக்காக அந்த பிரிவிற்கு சென்றால்... அங்கே அந்த அதிகாரிகள் வரி கேட்டு "அபாய சங்கு"அடிக்கின்றனறாம்.

எதற்காக கேட்கிறார்கள் வரி..? பயணிகள் தங்களது உறவுகளுக்காக வாங்கி சென்ற தங்க நகைகளுக்காக.கோடிக்கணக்கான ரூபாய் பெருமானமுள்ள நகைக்காக வரி கேட்கிறார்கள் என்றால் அது நியாயம் தான்... வெறுமனே இந்திய மதிப்பில் பத்தாயிரம் ரூபாய்க்கு அதிக மதிப்புள்ள தங்க நகையினை கொண்டு சென்றாலே சுங்க வரி செலுத்தியே ஆகவேண்டுமாம்...!
கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தான் இத்தகைய "அக்கப்போர்கள்" நடைபெறுவதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.வெளிநாடு வாழ் இந்தியர்களில் பெரும்பாலானோருக்கு தெரியாத இந்த வரி விதிப்பு முறை பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறது துபையிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு கலிஸ் டைம்ஸ்.

இந்த சுங்கவரி 1960 ஆம் ஆண்டில் சட்டமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்திருக்கிறது.அதன் படி வெளிநாடுகளில் வசிக்கும் ஒரு இந்திய ஆண்,அதிகப்பட்சமாக இந்திய மதிப்பில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளையும்,ஒரு இந்திய பெண் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை மாத்திரமே இந்தியாவிற்குள் எந்த வரி சமாச்சாரங்களும் இல்லாமல் கொண்டு வர முடியும்.அங்கீகரிக்கப்பட்ட இந்த உச்ச வரம்புக்கு அதிகமாக தங்க நகைகளை கொண்டு வருபவர்கள் "சுங்க வரி" கட்டாயம் செலுத்தியே ஆகவேண்டும் என்கிறது அந்த சட்டம்.
பிரச்சனை இங்கே தான் தொடங்குகிறது... 1960 ஆம் ஆண்டு இந்த வரிவிதிப்பு சட்டம் இயற்றும் வேளையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா...? வெறும் நாற்பதே ரூபாய் தானாம்...! இந்த கணக்குப் படி அன்றைய தினத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு ஒரு ஆண் பயணி சுமார் 250 கிராம் தங்க நகைகளையும்,பெண் பயணி ரூ.20 ஆயிரத்துக்கு சுமார் 500 கிராம் தங்க நகைகளையும் எந்த வித சுங்க வரியையும் செலுத்தாமல் கொண்டு வர முடியும்.

இன்றைய தேதியில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் 50 ஆண்டுகளாக எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் பின்பற்றப்படும் அதே பழைய விதிமுறைகளின் படி 10 ஆயிரம் ரூபாய்க்கு வெறும் 3 கிராம் மாத்திரம் ஒரு ஆணும்,20 ஆயிரம் ரூபாய்க்கு வெறும் 6 கிராம் தங்கத்தை மாத்திரமே இன்று இந்தியாவுக்குள் சுங்க வரியின்றி கொண்டு வரமுடியும்.இந்த உச்ச வரம்பினை மீறும் பட்சத்தில் சுங்கவரி கட்டாயம் வசூலித்தே ஆக வேண்டுமென்று இந்தியாவிலுள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் மத்திய சுங்க வரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளதாம்.

இதனால் தான் கொச்சி விமான நிலையத்தில் இந்த மாதிரி கெடுபிடிகளை சுங்க வரித்துறையினர் செய்து வருகின்றனராம்.இது வரை சென்னை,திருச்சி ஆகிய விமான நிலையங்களில் இந்த மாதிரியான கெடுபிடிகள் நடைபெற்றதாக தகவல் ஏதும் இல்லை என்ற போதிலும்,நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் இக்காலத்தில்,தங்கத்தின் விலையை வைத்து சுங்க வரிக்கான உச்ச வரம்பினை நிர்ணயிப்பதை தவிர்த்து,கொண்டு வரப்படும் தங்கத்தின் எடையை கணக்கில் கொண்டு சுங்க வரி விதிப்பதே சரியானதாக இருக்கும். 50 வருடங்களுக்கு முன் இயற்றப்பட்ட இந்த சட்டத்தின் விதிமுறைகளில் இந்திய அரசு மாற்றங்களை செய்ய வேண்டுமென்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிர்பார்கின்றனர்.

Friday, August 17, 2012

இப்தார் பார்ட்டி

புனித ரமலான் மாதத்தில் அதிகாலையிலிருந்து உண்ணாமல் பருகாமல் நோன்பிருந்த நோன்பாளிகள் தான் மாலை அந்தி சாயும் வேளையில் நோன்பு திறப்பார்கள்.ஆனால்.. நோன்பே வைக்காமல் "இப்தார்"நிகழ்ச்சி என்ற பெயரில் அரசியல் நடத்தும் ஒரு கேவலமான போக்கு நமது நாட்டில் மாத்திரம் தான் நடைமுறையில் இருப்பதாக எனக்கு தெரிகிறது. இந்த மக்கு மோகன் சிங் மாதிரியான ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் உலக வங்கியின் சொம்பு தூக்கிகளுக்கு "இப்தார் பார்ட்டி" கொடுக்கும் சில இஸ்லாமிய பெயர்தாங்கிகள்,மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கவர்களாவர்.
 முஸ்லிம்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் அத்வானிக்கு "இப்தார் பார்டியாம்"

Wednesday, August 15, 2012

சுதந்திரத்தை பெற்று "விட்டோம்....!"

 
அந்நியர்களின் ஆதிக்கத்திலிருந்து எமது மண்ணை மீட்க பல்வேறு தியாகங்களை புரிந்து நம் முன்னோர்கள் "சுதந்திர இந்தியாவை"உருவாக்கினர்.மக்களால் உருவாக்கப்பட்ட இந்த தேசம் இன்றைக்கு "மக்களின் தேசமாக இருக்கிறதா..?"

*அம்பானிகளும்,மல்லையாக்களும் வாழும் நம் நாட்டில் தான் பட்டினி சாவுகளும் நடக்கிறது...!

*விவசாய நிலங்கள்... ரியல் எஸ்டேட் முதலைகளின் "கருவூலங்களாக"மாறி விட்டது...!

*நமது தொழில்,எஞ்சியிருக்கும் விவசாயம் அனைத்தும் அந்நிய மயமாகிக் கொண்டிருக்கின்றது....!

*தேசத்தின் உணவுக் கிடங்குகளில் உணவு தானியங்கள் கெட்டுப் போய்க்கொண்டிருக்கின்றன....!

*கல்வி வணிகமயமாகி விட்டது......!

*மேட்டுக் குடிகளுக்கு ஒரு நீதி.... அடித்தட்டு மக்களுக்கு இன்னொரு நீதி....!

*லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடப்பதில்லை....!

*சாதி-மதவெறி ஊட்டி வளர்க்கப்படுகிறது....!

*சாராய ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது....!

*கொலை,கொள்ளை,கற்பழிப்பு போன்றவை அன்றாட செய்திகளாகி விட்டது...!

இவ்வாறாக சாமானிய மக்கள் வாழ்வதற்க்கே வழி இல்லாத நிலையில் இருக்கும் இந்த தேசத்தை என்னால் "சுதந்திர இந்தியா"என்று ஒப்புக் கொள்ள முடியாது.

இந்த தேசத்தில் அதிகார வர்க்கத்திடம் மாத்திரமே சுதந்திரம் ஒட்டு மொத்தமாக குவிந்து கிடக்கிறது.சாமானியர்கள் இன்னும் அடிமைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

தனியொரு மனிதனும் சந்தோசமாக வாழும் நிலை உருவாகும் வரைக்கும் மீண்டுமொரு "சுதந்திரப் போரை"தொடர்ந்து நடத்திடுவோம்...