Showing posts with label அரசியல் நாடகம். Show all posts
Showing posts with label அரசியல் நாடகம். Show all posts

Saturday, May 30, 2015

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : நியுஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எனது பேஸ்புக் கருத்து

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்எதிர்கட்சிகள் போட்டியிடாதது அதிமுக மீதுள்ள பயமா ? தேர்தல் ஆணையத்தின் மீது குறைந்து வரும் நம்ப...

Posted by முஹம்மது ரிஃபாயி on Saturday, May 30, 2015

Wednesday, May 27, 2015

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் புறக்கணிப்பும் திமுகவும்

திருமங்கலம் "கலையை"அறிமுகம் செய்து இடைத் தேர்தல்களையே கேலிக் கூத்தாக்கி விட்டு இன்றைக்கு தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவ...

Posted by முஹம்மது ரிஃபாயி on Wednesday, May 27, 2015

Monday, December 3, 2012

தலித் எதிர்ப்பு அரசியலா...?

பெற்றோர் விருப்பத்தை மீறி குறிப்பிட்ட சாதி-மத பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை கல்யாணம் செய்வது போல நடித்து கர்ப்பமாக்கி விட்டு நடுத்தெருவில் நிற்க வைத்து ஓடி விடுவது தமிழகத்தில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.இத்தீய நடவடிக்கைகளால் முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்படடுள்ளனர்.ஆனாலும் பொது இடங்களில் முஸ்லிம்கள் இந்த பாதிப்பு பற்றி பெரிய அளவில் விவாதிக்கவில்லை.ராமதாஸ் இது தொடர்பாக நேற்று அணைத்து சமுதாய மதத் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி இந்த விசயத்தை விவாதித்து சில தீர்மாணங்களை நிறைவேற்றியுள்ளார்.
கூட்டத்தில் பேசப்பட்ட நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இவை தான்

இந்த கூட்டத்தை தலித் எதிர்ப்பு கூட்டம் என்று சில அறிவுஜீவிகள் விமர்சிக்கின்றனர்.

அவர்களுக்கு நாம் முன்வைக்கும் சில விஷயங்கள்..

ராமதாஸ்.. தர்மபுரியில் இவரது சாதிப் பெண்னொருவள் ஓடிப்போய் விட்டாள் என்பதற்காக இந்த கூட்டத்தை கூட்டியிருக்கலாம்.அதை எவ்வாறு நீங்கள் தவறு என்று சொல்கிறீர்கள்?

முஸ்லிம் பெண்களை கடந்த காலங்களில் காதல் வயப்படுத்தி மற்ற மத சாதியினர் கவர்ந்து சென்றதை நீங்கள் இல்லை என்று மறுக்கத் தயாரா..?இல்லை.... இந்த செயல்களை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா..?

இந்த விசயத்தை தமுமுகவோ எஸ்டிபிஐ போன்ற இஸ்லாமிய இயக்கங்களோ தனியாக தம்மளவில் மாத்திரம் பேசி தீர்மானம் நிறைவேற்றி இருந்தால் இந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்குமா..? என்பது சந்தேகம் தான்.

இன்று வரை நமது உள்ளத்திலேயே புகைந்து கொண்டிருந்த இந்த விவகாரத்தை ஒரு பொது இடத்தில் வைத்து ராமதாஸ் விவாதிக்க தொடங்கி இருக்கிறார். இது தலித்துகளுக்கு எதிரானது என்ற விமர்சனம் தவறானது.நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான்.
கொள்ளுமேடு ரிஃபாயி

Friday, August 17, 2012

இப்தார் பார்ட்டி

புனித ரமலான் மாதத்தில் அதிகாலையிலிருந்து உண்ணாமல் பருகாமல் நோன்பிருந்த நோன்பாளிகள் தான் மாலை அந்தி சாயும் வேளையில் நோன்பு திறப்பார்கள்.ஆனால்.. நோன்பே வைக்காமல் "இப்தார்"நிகழ்ச்சி என்ற பெயரில் அரசியல் நடத்தும் ஒரு கேவலமான போக்கு நமது நாட்டில் மாத்திரம் தான் நடைமுறையில் இருப்பதாக எனக்கு தெரிகிறது. இந்த மக்கு மோகன் சிங் மாதிரியான ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் உலக வங்கியின் சொம்பு தூக்கிகளுக்கு "இப்தார் பார்ட்டி" கொடுக்கும் சில இஸ்லாமிய பெயர்தாங்கிகள்,மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கவர்களாவர்.
 முஸ்லிம்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் அத்வானிக்கு "இப்தார் பார்டியாம்"