Wednesday, August 15, 2012

சுதந்திரத்தை பெற்று "விட்டோம்....!"

 
அந்நியர்களின் ஆதிக்கத்திலிருந்து எமது மண்ணை மீட்க பல்வேறு தியாகங்களை புரிந்து நம் முன்னோர்கள் "சுதந்திர இந்தியாவை"உருவாக்கினர்.மக்களால் உருவாக்கப்பட்ட இந்த தேசம் இன்றைக்கு "மக்களின் தேசமாக இருக்கிறதா..?"

*அம்பானிகளும்,மல்லையாக்களும் வாழும் நம் நாட்டில் தான் பட்டினி சாவுகளும் நடக்கிறது...!

*விவசாய நிலங்கள்... ரியல் எஸ்டேட் முதலைகளின் "கருவூலங்களாக"மாறி விட்டது...!

*நமது தொழில்,எஞ்சியிருக்கும் விவசாயம் அனைத்தும் அந்நிய மயமாகிக் கொண்டிருக்கின்றது....!

*தேசத்தின் உணவுக் கிடங்குகளில் உணவு தானியங்கள் கெட்டுப் போய்க்கொண்டிருக்கின்றன....!

*கல்வி வணிகமயமாகி விட்டது......!

*மேட்டுக் குடிகளுக்கு ஒரு நீதி.... அடித்தட்டு மக்களுக்கு இன்னொரு நீதி....!

*லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடப்பதில்லை....!

*சாதி-மதவெறி ஊட்டி வளர்க்கப்படுகிறது....!

*சாராய ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது....!

*கொலை,கொள்ளை,கற்பழிப்பு போன்றவை அன்றாட செய்திகளாகி விட்டது...!

இவ்வாறாக சாமானிய மக்கள் வாழ்வதற்க்கே வழி இல்லாத நிலையில் இருக்கும் இந்த தேசத்தை என்னால் "சுதந்திர இந்தியா"என்று ஒப்புக் கொள்ள முடியாது.

இந்த தேசத்தில் அதிகார வர்க்கத்திடம் மாத்திரமே சுதந்திரம் ஒட்டு மொத்தமாக குவிந்து கிடக்கிறது.சாமானியர்கள் இன்னும் அடிமைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

தனியொரு மனிதனும் சந்தோசமாக வாழும் நிலை உருவாகும் வரைக்கும் மீண்டுமொரு "சுதந்திரப் போரை"தொடர்ந்து நடத்திடுவோம்...

No comments:

Post a Comment