Friday, May 22, 2015

மீண்டும் வலைவீச்சை தொடர்கிறேன்...பகுதி -01

பேனாவின் மீதும்,வீட்டில் கிடக்கும் தாள்களின் மீதும் தீராத காதல் கொண்டு மனதில் தோன்றியதை கிறுக்கிக் கொண்டிருந்த எனக்கு வெளிநாட்டு வாழ்க்கையின் வாயிலாக எனக்கு அறிமுகமானது கணிணித் தொழில்நுட்பம். 

பள்ளிப் படிப்பைக் கூட முறையாக பூர்த்தி செய்திராத எனக்கு இறைவன் அவனது அருள்மறையாம் குர்ஆனை மனனம் செய்யும் பாக்கியத்தை அருளினான்.பொதுவாக இஸ்லாமிய மதரஸா கல்வி பயின்றவர்களால் இஸ்லாமிய வட்டத்துக்கு வெளியே பெரிய அளவில் சோபிக்க முடியாது என்று உறுதியாக நம்பப்பட்ட காலத்தில் நான் மதரஸாவில் குர்ஆன் மனனம் செய்து வெளியேறுகிறேன்.

பிறகு சிறிது காலம் பள்ளிவாசல்களில் இமாமத் பணி தொடர்ந்து வெளிநாடு நோக்கிய பொருள் தேடல் இன்று வரை தொடர்கிறது.இந்த வெளிநாட்டு வாழ்ககை தொடக்கத்திலிருந்து எனக்கு கணிணியுடனான தொடர்பு தொடங்குகிறது.

- தொடர்வேன்

No comments:

Post a Comment